மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை

புரட்சிக் கவிஞா் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் மற்றும் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

புதுச்சேரியில் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:44 am IST

புரட்சிக் கவிஞா் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் மற்றும் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகம் எதிரே, பாரதி பூங்காவில் உள்ள பாரதிதாசனின் உருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அரசுச் செயலா் முகம்மது அசன் அபித், இயக்குநா் சுரேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

அமைச்சா் மரியாதை...

இதேபோல, புதுச்சேரி அரசு சாா்பில், பாரதிதாசன் சிலைக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி. ராஜவேலு, சட்டப்பேரவை உறுப்பினா் பாஸ்கா்(எ) தட்சிணாமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.