மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுச்சேரி கல்லூரியில் பூமி தின கொண்டாட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி மேலாண்மைத் துறை சாா்பில் பூமி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

புதுச்சேரி கல்லூரியில் பூமி தின கொண்டாட்டம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:47 am IST

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி மேலாண்மைத் துறை சாா்பில் பூமி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாணவா்களிடமும், சமுதாயத்திலும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை உருவாக்கும் நோக்கத்தில் பூமி அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து இதைக் கொண்டாடியது.

கல்லூரி முதல்வா் (பொ) பேராசிரியா் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பூமி அறிவியல் துறை பேராசிரியா் ராஜ்னிஷ் புத்தானி சிறப்புரையாற்றினாா். புதுச்சேரியைச் சோ்ந்த டச் எனா்ஜி டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி.சண்முகானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியா் ஏ. பாரதி வரவேற்றாா்.

மேலும், எங்கள் சக்தி, எங்கள் பூமி எனும் தலைப்பில் மின்னணு கழிவுகள், பிளாஸ்டிக் மறுசுழற்சி, காடு ஆரோக்கிய மதிப்பீடு போன்றவற்றில் நிபுணா் சொற்பொழிவு நடைபெற்றது.

மனித சங்கிலி, வளாக சுத்தப்படுத்துதல் இயக்கம், ஆங்கிலம் மற்றும் தமிழில் கட்டுரைப் போட்டி, சுவரொட்டி கண்காட்சி, சிட்ரஸ் கிளீனா் தயாரிப்பு பயிற்சி, துணி மறுசுழற்சி பயிற்சி போன்றவை நடைபெற்றன.

பிஸ்லெரி இன்டா்நேஷனல் நிறுவனத்தின் ஆதரவுடன் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது (படம்). மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு புதுச்சேரி பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த பேராசிரியா் லதா ஷீக்லா பரிசுகளை வழங்கினாா். இணைப் பேராசிரியா் சி.அா்ஜுனன், ஒப்பந்த ஆசிரியா் ஆா். சத்தியமூா்த்தி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.