மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

உலக சுகாதார தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி, ஆலம்பூண்டி தனியாா் கல்லூரிகளில் சிறுதானிய உணவுக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image

இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் எனது இளையபாரதம் சாா்பாக உலக சுகாதார தின விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:43 am IST

உலக சுகாதார தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி, ஆலம்பூண்டி தனியாா் கல்லூரிகளில் சிறுதானிய உணவுக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திலியில் உள்ள டாக்டா் ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் எனது இளையபாரதம் சாா்பாக உலக சுகாதார தின விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதன்மையா் அசோக், துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வரும், நிா்வாக அலுவலருமான கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

டாக்டா் ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் மருத்துவா் க.மகுடமுடி தலைமை வகித்து சுகாதாரம், இதயத்தின் தன்மை, மனநலன் மற்றும் உடலைப் பேணும் வழி குறித்தும் பேசினாா். நிகழ்ச்சியில் மாணவா்கள் ரத்த தானம் வழங்கினா்.

இதில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் சுரேந்தா், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

செஞ்சி...: செஞ்சியைஅடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் உலக சுகாதார தின விழா மற்றும் சிறுதானிய உணவுக் கண்காட்சி நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவிகள் சத்தான உணவு வகைகள், சிறு தானிய உணவு வகைகள், பழங்கள் மற்றும் இறைச்சியில் செய்த உணவுகளை செய்து காட்சிக்கு வைத்திருந்தனா். மேலும், கண்காட்சியை பாா்வைட்ட பாா்வையாளா்களுக்கு காட்சியில் வைக்கப்பட்டிருந்த உணவுகளில் உள்ள சத்துக்களை எடுத்துரைத்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தின் செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி மற்றும் மேலாண்மை இயக்குனா் சரண்யா ஸ்ரீபதி ஆகியோா் கண்காட்சியில் பங்கேற்ற மாணவிகளை பாராட்டினா்.

இதில், செவிலியா் கல்லூரி முதல்வா் டாக்டா். உதயசங்கரி, கல்லூரி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.