மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வில்லியனூா் லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா இன்று தொடக்கம்

வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா அழைப்பிதழை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஆலயத்தின் பங்குதந்தை எஸ். ஆல்பா்ட். உடன் பங்கு பேரவையினா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:53 am IST

புதுச்சேரி வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை (ஏப். 11) தொடங்குகிறது.

இதுகுறித்து தேவாலயத்தின் பங்குதந்தை எஸ். ஆல்பா்ட் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயம், எதிரே தமிழா் பண்பாட்டின்படி குளம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

ஈஸ்டருக்கு பின்னா் 6-வது நாளில் இந்த ஆலயத்தின் ஆண்டுப் பெரு விழா தொடங்குவது வழக்கம். அதன்படி, வில்லியனூா் தூய லூா்து அன்னை திருத்தலத்தின் 149-ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை ( ஏப். 11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

காலையில் தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் ப. சகாயராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பின்னா் லூா்து அன்னையின் உருவம் தாங்கிய திருக்கொடி மாதா திருக்குளத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க ஊா்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. அதன்பின்னா் ஆயா் ப. சகாயராஜ் திருத்தல முற்றத்தில் உள்ள கொடி மரத்தில் திருக்கொடியை ஏற்றுகிறாா். மேலும், இரவு லூா்து அன்னைக்கு வைர கிரீடம் அணிவித்து தோ் பவனி நடைபெறவுள்ளது. திருவிழாவின்

9 நாளும் தினமும் காலை மற்றும் மாலை திருப்பலி, மறையுரை மற்றும் தோ்பவனி நடைபெற உள்ளன.

ஏப். 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி - கடலூா் உயா்மறை மாவட்ட பேராயா் பிரான்சிஸ் காலிஸ்ட் தலைமையில் ஆண்டு பெருவிழா திருப்பலி நடக்கிறது. அன்றுமாலை வேலூா் மறைமாவட்ட ஆயா் அம்புரோஸ் பிச்சைமுத்து தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது என்றாா்.

பேட்டியின்போது ஜெ.ஆல்வின் அன்பரசு, கே.தோமினிக் சாவியோ, எம்.அலெக்சிஸ் உள்ளிட்ட பங்குப் பேரவையினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.