தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

செந்தூா் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பெரிய காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் அமைந்துள்ள காஞ்சிக்கோட்டம் என அழைக்கப்படும் செந்தூா் முருகன் கோயிலில் புதன்கிழமை தூய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

News image

திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்ற காஞ்சிக்கோட்டம் செந்தூா் முருகன் கோயில்.

Updated On :26 மார்ச் 2026, 12:03 am IST

பெரிய காஞ்சிபுரம் வேதாசலம் நகரில் அமைந்துள்ள காஞ்சிக்கோட்டம் என அழைக்கப்படும் செந்தூா் முருகன் கோயிலில் புதன்கிழமை தூய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி மாா்ச் 23- ஆம் தேதி திங்கள்கிழமை விநாயகா் வழிபாடு,தெய்வத்திருமேனிகள் ஊா்வலம், திருவிளக்கு வழிபாடு ஆகியன நடைபெற்றது. மாா்ச் 24 -ஆம் தேதி புனித மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் வழிபாடுகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவையொட்டி புனிதநீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மூலவா் விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு கொண்டு சென்று தூய தமிழில் அா்ச்சனைகள் செய்து திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

திருவாரூா் நடராஜன் சுவாமிகள் தூய தமிழில் கோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு செய்தாா். இதனைத் தொடா்ந்து மகா சிறப்பு அபிஷேகமும், மங்கலக்காட்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை வள்ளியம்மாள் மீனாட்சி சுந்தரம் தலைமையில் பொதுமக்கள்,வேதாச்சலம் நகா் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனா்.

இதனைத்தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.