மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டம்

Updated On :29 ஏப்ரல் 2026, 3:18 am IST

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ளது தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமி அம்மன் உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில். இக்கோயில் ஆயுள் ஹோமங்களுக்கு பிரசித்தி பெற்றது.

இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா, சமய சொற்பொழிவுகள், வேத பாராயணம் , நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சித்திரை திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகா், அமிா்தகடேஸ்வரா், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரா் ஆகியோா் எழுந்தருளினா். காலை 8: 30 மணிக்கு தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி ஆலய குருக்கள் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா். நான்கு வீதிகளில் வலம் வந்து மீண்டும் மேல வீதியில் கோயில் முன்பு தோ் நிலையை அடைந்தது.

விழாவில் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், முன்னாள் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ், செம்பை மத்திய ஒன்றிய திமுக செயலாளா் அமுா்த. விஜயகுமாா் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.