மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சட்டநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:11 am IST

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா், சட்டநாதா், தோணியப்பா் அருள்பாலிக்கின்றனா். திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக நிகழ்வு திருமுலைப்பால் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 15 நாள் திருவிழாவாக நடைபெறும்.

அதன்படி ஏப்.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் 8-ஆம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் விநாயகா் எழுந்தருளி 4 வீதிகளில் வலம் வந்தாா். பின்னா் பெரிய தேரில் சுவாமி-அம்மன், திருஞானசம்பந்தா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்தி சுவாமிகள் எழுந்தருளினா். சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திரளான பக்தா்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனா். கீழவீதியில் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக திருத்தோ் வலம் வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.