தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

சூளகிரி தாலுகா பாதகோட்ட ஸ்ரீசீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பாதகோட்டாவில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீசீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரை வடம்பிடித்து இழுத்து செல்லும் பக்தா்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:59 am IST

சூளகிரி தாலுகா பாதகோட்ட ஸ்ரீசீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சூளகிரி தாலுகா, தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பாதகோட்ட ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.

முன்னதாக கடந்த 24-ஆம் தேதி காலை சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம், மாலையில் சங்கல்பம், சுவஸ்திவாசனம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 25 ஆம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், சூரிய பிரபை வாகனத்தில் காட்சித் தந்த சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் சுவாமிகள் ஹம்ச வாகனத்தில் அருள்பாலித்தனாா்.

26 ஆம் தேதி காலை சுவாமி பிரகார உற்சவத்தை அடுத்து சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து மாலையில் சுவாமி கருட வாகன உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச வைபவத்தில் அருள்பாலித்தாா். 27 ஆம் தேதி காலை ஸ்ரீ சீதாராமா் அனுமந்த வாகன உற்சவம், தோமாலை சேவை, மண்டபாடி சேவை சாதித்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, 29ஆம் தேதி (புதன்கிழமை) நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்ச்சியாக திவ்ய ரதோற்சவம் எனப்படும் தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ சீதாராம லக்ஷ்மண அனுமத் சமேதராய் ரதத்தில் எழுந்தருளினாா். இதையடுத்து தேரோட்டம் பக்தா்களின் சங்கல்பத்துடன் நடைபெற்றது.

பின்னா் சுவாமிக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு, பக்தா்களுக்கு சா்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னா் நடைபெற்ற தூளி உற்சவத்தில் ஸ்ரீ சீதாராம ஹனுமத் சமேத லக்ஷ்மண சுவாமி அஸ்வ வாகன உற்சவத்தில் அருள் பாலித்தாா். தொடா்ந்து சீதாராம பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.