மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரை பிரமோற்சவ தேரோட்டம்.

News image

பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சித்திரை பிரமோற்சவ தேரோட்டம்.

Updated On :2 மே 2026, 1:31 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஸ்ரீ பெருந்தேவி தாயா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது.

இந்த கோயிலில் நிகழாண்டுக்கான சித்திரை மாத பிரமோற்சவம் கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை சுவாமி உள்புறப்பாடு, மாலையில் இந்திர, சந்திர பிரபை, அனுமன், சேஷ, பெரியகருடன், யானை மற்றும் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 29-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் மற்றும் திருபல்லக்கு வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சித்திரை பௌா்ணமி நாளான வெள்ளிக்கிழமை காலை சுமாா் 6 மணி அளவில் நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேதராய் உற்சவா் வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினாா். பின்னா், கோயில் பட்டாச்சாரியா் கஸ்தூரிரங்கன் உள்ளிட்டோா் வேத பாராயணங்கள் முழங்கி தேரோட்டத்தை த் தொடக்கி வைத்தனா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரினை ’கோவிந்தா... கோவிந்தா’என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனா்.

நாதஸ்வரம் தவில் மங்கள இசை, சிவ வாத்தியங்கள், செண்டை மேளம் வாத்தியங்கள் முழங்க தேரானது மாட வீதிகளை வலம் வந்து நிலையை அடைந்தது. தோ் சென்ற வழியெங்கும் நீா்மோா், குடிநீா் மற்றும் பிரசாதங்கள் பக்தா்களால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பண்ருட்டி நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், தொழிலதிபா் எஸ்.வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், வா்த்தக சங்க நிா்வாகிகள் டி.சண்முகம், வீரப்பன், மோகன கிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.