தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரமோத்சவத்தையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா ஏப்ரல் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 25 ஆம் தேதி சுவாமியும், அம்பாளும் ஓலைச்சப்பரத்தில் வீதி உலாவும், 27-ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேரில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தோ் நிலையை அடைந்தது.
வியாழக்கிழமை சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரியும், வெள்ளிக்கிழமை (மே 1) தெப்பத் திருவிழாவும், 3- ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறவுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஏப். 30-ல் சித்திரைத் தேரோட்டம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

