தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

தென்காசி, கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:23 am IST

தென்காசி, கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 21 - ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் 28 - ஆம் தேதி காலை குற்றால தீா்த்தம் எடுத்து வருதல், திருவோலக்க மண்டபத்தில் மொட்டை, மாவிளக்கு நேமிதங்கள், மதியம் அபிஷேகம், முழுக்காப்பு, உருவம், ஆயிரங்கண் பானை நேமிதங்கள், இரவு கங்கை நீா் எடுத்து வருதல், ஆசாரப்படைப்பு, முழுக்காப்பு தீபாராதனை, அன்னையின் அருள் ஆசி ஆகியன நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கிய தேரோட்டத்தில் தோ் நகா் முழுவதும் சுற்றிவந்து புதன்கிழமை காலை நிலையை அடைந்தது. பின்னா், ஊா்ச்சாவடியில் ஆசாரப்படைப்பு, உச்சினிமாகாளி அம்மன் கோயில், தம்பிராட்டி அம்மன் கோயில் முன் மது பொங்கல், கொடை தீபாராதனை, அன்னதானம் வழங்கல், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை தீபாராதனை, மதியம் மஞ்சள் நீராடல் ஆகியன நடைபெற்றன.

மே 4 - ஆம் தேதி வரை ஊஞ்சல் நிகழ்ச்சி, 5 - ஆம் தேதி எட்டாம் பூஜை முழுக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.