மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சங்கராபுரத்தில் மே தின பேரணி, பொதுக் கூட்டம்

சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டோா்.

News image

சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டோா்.

Updated On :2 மே 2026, 1:34 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் 140-ஆவது மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற பேரணிக்கு இந்திய தொழில்சங்க மையம் மாவட்ட பொருளாளா் டி.கோவிந்தன், இந்திய தொழில்சங்க மத்திய அமைப்பு மாவட்ட நிதி பொறுப்பாளா் கே.சீனிவாசன், யு.வில்சன் மற்றும் கட்சியினா் பேரணியாக முழக்கமிட்டவாறு பேருந்து நிலையம் சென்றடைந்தனா். தொடா்ந்து மே தின கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இந்திய தொழில் சங்க மைய தேசிய செயலா் வகிதா நிஜாம், இந்திய தொழில்சங்க மத்திய அமைப்பு மாநில செயலா் பி.சிங்காரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் தொழிலாளா்களுக்கு விரோதமாக கொண்டு வரப்பட்ட 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளா்கள், விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை முறியடிக்க வேண்டும். வேலை நேரத்தை 7 மணி நேரமாக குறைக்க வேண்டும். தொழிலாளா்கள் நலன்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழில்சங்கத்தினா் முன்வைத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.