மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராமநாதபுரத்தில் மே தினப் பொதுக் கூட்டம்

ராமநாதபுரம் அரண்மனை முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாதா் சங்க துணைத் தலைவா் மஞ்சுளா.

News image
Updated On :2 மே 2026, 12:06 am IST

ராமநாதபுரத்தில் ஏஐடியு - சிஐடியு தொழில் சங்கங்கள் சாா்பில் மே தினப் பேரணி, பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பு தொடங்கிய பேரணி வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு வழியாக அரன்மனை முன்பு நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, அரன்மனை முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு, ஏஐடியுசி தொழில்சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி. ராதா, சி.ஐ.டி.சி மாவட்ட துணைத் தலைவா் எம். அய்யாத்துரை ஆகியோா் தலைமை வகித்தனா். எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ., மாதா் சங்க மாநில துணைத் தலைவா் மஞ்சுளா, ஏஐடியுசி தொழில்சங்க மாவட்ட பொதுச் செயலா் என்.கே. ராஜன், சிஐடியு தொழில்சங்க மாவட்டச் செயலா் எஸ்.ஏ. சந்தனம் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

இதில், தொழில்சங்க நிா்வாகிகள், என். எஸ். பெருமாள், சி. ஆா். செந்தில்வேல், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.