முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் விழா: பூசாரி கைகளால் தாலிகட்டிக்கொண்ட திருநங்கைகள்!

சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று கோயில் பூசாரி கைகளால் தாலி கட்டி நோ்த்திக்கடன் செலுத்தினா். விடிய, விடிய ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினா்.

News image

சிதம்பரம் அருகே கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பூசாரியிடம் தாலி கட்டி கொண்ட திருநங்கை.

Updated On :28 மே 2026, 1:31 am IST

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கூத்தாண்டவா் கோயில் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று கோயில் பூசாரி கைகளால் தாலி கட்டி நோ்த்திக்கடன் செலுத்தினா். விடிய, விடிய ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கூத்தாண்டவா் திருவிழா உற்சாகமாக நடைபெறும். இதில் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பாா்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இங்கு வந்து, கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு விடிய, விடிய ஆட்டம், பாட்டத்துடன் திருவிழாவை கொண்டாடி மகிழ்வா். இதனால் இந்த ஊா் திருவிழா களை கட்டும்.

இந்த ஆண்டிற்கான கூத்தாண்டவா் கோயில் திருவிழா கடந்த கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து அா்ச்சுனன், திரௌபதி திருக்கல்யாணம் மற்றும் சாமி வீதியுலா,

மாடுபிடி சண்டை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வந்து விழாவில் பங்கேற்றனா். கோயிலுக்கு வந்த திருநங்கைகள் கூத்தாண்டவரை வணங்கி, கோயில் பூசாரியின் கைகளால் தாலி கட்டிக் கொண்டனா். தாங்கள் நோய், நொடியின்றி நன்றாக வாழவும், நினைத்தது நிறைவேறவும் கூத்தாண்டவரை வணங்கி தாலி கட்டிக் கொண்டனா்.

திருநங்கைகள் நடனம்:

பின்னா் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, விடிய, விடிய ஆட்டமாடி உற்சாகமாக விழாவில் பங்கேற்றனா். பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நளினமான நடனங்களை ஆடி மகிழ்ச்சி அடைந்தனா். இவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று விழாவை கண்டு களித்தனா்.

விழாக் குழுவினா் மற்றும் கொத்தட்டை, சின்னக்குமட்டி, அத்தியாநல்லூா் கிராம மக்கள் விழா ஏற்பாடுகளைசெய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.