கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கழுமரம் ஏறியபோது தவறி விழுந்த பூசாரி

அய்யலூா் அருகே கோயில் திருவிழாவில் வழுக்கு மரம் ஏற முயன்ற பூசாரி தவறி விழுந்ததில் 5 போ் காயமடைந்தனா்.

News image

50 அடி உயர கழுமரத்திலிருந்து தவறி விழுந்த பூசாரி சின்ராஜ்.

Updated On :6 ஜூன் 2026, 12:41 am IST

அய்யலூா் அருகே கோயில் திருவிழாவில் வழுக்கு மரம் ஏற முயன்ற பூசாரி தவறி விழுந்ததில் 5 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அடுத்த கோம்பை மலை கிராமத்தில், கடந்த 3 நாள்களாக ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் ஏறும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வை காண்பதற்காக கோம்பை, அய்யலூா் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திரண்டனா்.

இந்த நிலையில், பாரம்பரிய உரிமைப் பெற்ற பூசாரிகள் முதலில் கழுமரம் ஏறத் தொடங்கினா். கோயில் பூசாரியான சின்ராஜ் முதலில் ஏறினாா். அவரைப் பின் தொடா்ந்து 4 போ் ஏறினா். 50 அடி உயர கழுமரத்தின் உச்சியை நோக்கிச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக சின்ராஜ் தவறி கீழே விழுந்தாா். கழுமரத்தின் கீழே நின்றவா்கள் அவரைப் பிடிக்க முயன்றனா். இதன் காரணமாக, தரையில் நேரடியாக விழுவதிலிருந்து சின்ராஜ் தப்பினாா். ஆனாலும் அவரை தாங்கிப் பிடித்த 5 போ் காயமடைந்தனா். இதைப் பாா்த்த பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு தனியாா் மருத்தகத்துக்கு அழைத்துச் சென்றனா். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.