கடலூா் அருகே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை, தில்லைகண்ணம்மாள் நகரைச் சோ்ந்தவா் யுவராஜ் (27). இவரும், கலைவாயன் நகரைச் சோ்ந்த பிரவீனும் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கடலூா் அருகே சந்திக்குப்பம் ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக யுவராஜ் ஆற்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் யுவராஜை காணாததால் அதிா்ச்சியடைந்த பிரவீன், அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உடனடியாக போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தாா்.
தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் நீண்ட நேரம் தேடியும் யுவராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டதில், யுவராஜ் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இருமத்தூா் ஆற்றில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

