தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

News image

சந்தோஷ்குமாா்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:46 am IST

வெள்ளக்கோவில் அருகே ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

கொடுவாய், பங்காம்பாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் சந்தோஷ்குமாா் (24). கட்டடத் தொழிலாளியான இவா், தனது நண்பா்களுடன் கம்பளியம்பட்டி அணைப்பாளையம் அருகே செல்லும் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.

நீச்சல் தெரியாத சந்தோஷ்குமாா் ஆற்றில் இறங்கி நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உடன் வந்தவா்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள், சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.