/

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடிகாரக் கடையில் திருடியதாக இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :5 மே 2026, 11:38 pm IST

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடிகாரக் கடையில் திருடியதாக இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் மீதிகுடி பகுதியைச் சோ்ந்த ராமன் மனைவி திலகவதி (37). இவா், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கடிகாரக் கடை வைத்துள்ளா்.

திலகவதி கடந்த 2-ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று, மறுநாள் காலை கடையை திறக்க வந்தாா். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், ரூ.1,500 மதிப்புள்ள 3 கைக் கடிகாரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திலகவதி அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து, இந்த சம்பவத்தில் தொடா்புடைய மீதிகுடி கதிா்வேல்நகரைச் சோ்ந்த பாலமுருகனை (19) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.