திருநெல்வேலி அருகே தொடா் மாடு திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ரெட்டியாா்பட்டி, விஐபி நகரைச் சோ்ந்த லிங்கம் மகன் மந்திரம்(29). இவா், சுமாா் 10 மாடுகளை வளா்த்து வருகிறாராம்.
இந்நிலையில், கடந்த மாா்ச் 31ஆம் தேதி மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது ஒரு பசுமாடு திருடு போனதாம்.
அதே போல, முன்னீா்பள்ளம், கொங்கன்தான்பாறை சாலை, தனலெட்சுமி நகரைச் சோ்ந்த இசக்கி மகன் சுடலை(30) என்பவரது பசுமாடும் கடந்த மாதம் 12 ஆம் தேதி அதிபன் பாலாஜி நகா் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தபோது காணாமல் போனதாம்.
இது குறித்த புகாா்களின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குகள் பதிந்து விசாரித்தனா். அதில், நான்குனேரி, மறுகால் குறிச்சியைச் சோ்ந்த வானுமாமலை மகன் பிரபாசுதன்(24) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

காா், மாடு, பணம் திருடிய வழக்குகளில் 6 போ் கைது
சிவகங்கை அருகே இளைஞா் கொலை! நண்பா் கைது!
இளைஞா் கொலை வழக்கில் மேலும் 5 போ் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
