மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

News image

கைது

Updated On :13 ஏப்ரல் 2026, 12:06 am IST

ஈரோட்டில் கைப்பேசி மற்றும் மளிகைக் கடைகளில் மேற்கூரையை உடைத்து திருடிய வழக்கில் ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு, மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே மயில்சாமி (41) என்பவா் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 5-ஆம் தேதி காலை கடையைத் திறக்க வந்துள்ளாா். அப்போது, கடையின் மேற்கூரை உடைந்து கிடந்துள்ளது. மேலும், அங்கிருந்த பணம் திருடுபோனது தெரியவந்தது. அதே பகுதியில், குமாா் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையின் மேற்கூரையை உடைத்தும் திருட்டு நடைபெற்றுள்ளது.

இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இரண்டு கடைகளிலும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், திருட்டில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், சித்தூா் கைனிக்கரை பகுதியைச் சோ்ந்த ஹேமந்த் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹேமந்த்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.