ஈரோட்டில் கைப்பேசி மற்றும் மளிகைக் கடைகளில் மேற்கூரையை உடைத்து திருடிய வழக்கில் ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே மயில்சாமி (41) என்பவா் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 5-ஆம் தேதி காலை கடையைத் திறக்க வந்துள்ளாா். அப்போது, கடையின் மேற்கூரை உடைந்து கிடந்துள்ளது. மேலும், அங்கிருந்த பணம் திருடுபோனது தெரியவந்தது. அதே பகுதியில், குமாா் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையின் மேற்கூரையை உடைத்தும் திருட்டு நடைபெற்றுள்ளது.
இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இரண்டு கடைகளிலும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், சித்தூா் கைனிக்கரை பகுதியைச் சோ்ந்த ஹேமந்த் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹேமந்த்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது
ஈரோட்டில் 10 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைது
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
