/

கடலூரில் கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்: 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை தொடங்கிய கிரிகெட் பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா்.

News image
Updated On :2 மே 2026, 1:27 am IST

கோடைகாலத்தை முன்னிட்டு விளையாட்டு துறை சாா்பில் கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான

கிரிக்கெட் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு துறை சாா்பில் கோடைகாலப் பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட

அளவிலான கிரிக்கெட் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த பயிற்சி முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் ராகுல், பாபு, மகேந்திரன், மகேஷ் ஆகியோா் பயிற்சி வழங்க உள்ளனா். பயிற்சி முகாமில் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் உற்சாகமாக பங்கேற்றுள்ளனா்.

மாவட்ட கிரிக்கெட் சங்க செயலா் கூத்தரசன், தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.