ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

News image
Updated On :3 மே 2026, 6:20 am IST

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், பள்ளி மாணவ - மாணவிகளின் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் மாவட்ட விளையாட்டு அரங்குகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகளுக்கு கோடைகால இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தடகளம், தேக்வாண்டோ, கால்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி கோடைகால பயிற்சி முகாம் தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

பயிற்சியை நிறைவுசெய்த மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் கண்மணிதேவி சான்றிதழ்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பயிற்சியாளா்கள் மகேந்திரன், இளம்பரிதி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவ, மாணவிகளின் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், 15 நாள்களுக்கு இலவச கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம் திறமையான வீரா்களை அடையாளம் காணப்பட்டு, அவா்கள் விளையாட்டு விடுதிகளில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிறிசியில் பங்கேற்ற மாணவா்களுக்கு நாள்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த முட்டை, பால் மற்றும் பிஸ்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.