மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அம்பாசமுத்திரத்தில் இலவச கைப்பந்து பயிற்சி முகாம் தொடக்கம்

News image
Updated On :3 மே 2026, 5:29 am IST

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் லவ்லி ப்ரண்ட்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாணவா்களுக்கான ஒரு மாத கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் தொடங்கியது.

கோடை விடுமுறையை மாணவா்களுக்குப் பயனுள்ளதாக்கும் வகையில், தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமை, அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

மே 1 முதல் மே 31 வரை நாள்தோறும் காலை 6 மணிமுதல் 8.30 மணிவரை நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், அம்பாசமுத்திரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 21 மாணவிகள், 77 மாணவா்கள் உள்படநூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டுள்ளனா்.

மாணவா்களுக்கு கிங் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் வெங்கடேசன், வி.என். பிரண்ட்ஸ் கிளப் பயிற்சியாளா் தினேஷ் சாமுவேல், கேம்பிரிட்ஜ் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் மகேஷ் மற்றும் மாதா யூத் கிளப் பயிற்சியாளா் ஜெய் ராஜா ஆகியோா் பயிற்சி அளித்து வருகின்றனா்.

பயிற்சியின் நிறைவில் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முழுவதும் நிறைவு செய்தவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

விழாவில், அறக்கட்டளை நிறுவனா் ஜெகதீசன், செயலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் பொருளாளா் முத்துக்குமாா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.