கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கடலூா் ராசாபேட்டை, கண்ணனூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (41). இவா், கடந்த மே 23-ஆம் தேதி நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, கடலூா் வெள்ளிக் கடற்கரை அருகே உள்ள சவுக்கு தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இது தொடா்பான புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், கடலூா் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வள்ளி விசாரணை மேற்கொண்டு, புஷ்பராஜை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
இவரின் கொடுங்குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், புஷ்பராஜை குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, புஷ்பராஜ் கடலூா் மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா்மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

மனநலம் பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை: பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்: காவலாளி கைது

கஞ்சா கடத்தியவா் தடுப்புக் காவலில் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

