நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மனநலம் பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை: பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:05 am IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பொள்ளாச்சி அருகே ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தாயின் பராமரிப்பில் வீட்டில் இருந்தாா். அப்பெண் வீட்டில் கடந்த 2021 டிசம்பா் 28ஆம் தேதி தனியாக இருந்த சமயத்தில், அவா் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (45), அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கா்ப்பம் அடைந்தாா். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, பாலசுப்பிரமணியன்தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து பாலசுப்பிரமணியனை பொள்ளாச்சி அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து கற்பழிப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி வி.சுந்தரராஜ் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இழப்பீட்டு நிதி வழங்கவும் சிபாரிசு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.