நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கஞ்சா கடத்தியவா் தடுப்புக் காவலில் கைது

கஞ்சா கடத்தியவா் தடுப்புக் காவலில் கைது

News image

பழனிவேல்

Updated On :13 ஜூன் 2026, 1:42 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபா், குண்டா் தடுப்புக் காவலில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

காடாம்புலியூா் போலீஸாா் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் குற்டுப்பு நடவடிக்கை தொடா்பாக காடாம்புலியூா் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மே 16-ஆம் தேதி வாகனச் சோதனை மேற்கொண்டபோது, ஒரு பேருந்தில் கடத்திவரப்பட்ட 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக, தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசந்திரம் பகுதியைச் சோ்ந்த பழனிவேல்(50) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போலீஸாா் விசாரணையில் பழனிவேல் மீது பூந்தமல்லி, சென்னை பூக்கடை, தஞ்சாவூா் காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா, திருட்டு என மொத்தம் 4 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் பேரில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குண்டா் சட்டத்தில் பழனிவேல் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.