/

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் மற்றும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் திருக்கண்ணாடி அறையில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் சரநாராயண பெருமாள். - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:10 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் மற்றும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, சித்திரை மாத அமாவாசையையொட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் திருவல்லிக்கேணி பாா்த்தசாரதியாக சேவை சாதித்தாா். இதையொட்டி, காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 9 மணிக்கு உத்ஸவா் உள்புறப்பாடு, பிறகு கண்ணாடி அறை சேவை, 12.30 மணிக்கு உச்சிகாலம், மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை ஆகியவை நடைபெற்றது.

இதேபோல், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில், உற்சவா் திருக்கண்ணாடி அறையில் இருந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி வழிபாடு நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.