மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை பௌா்ணமி விழா

சித்திரை பௌா்ணமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் பெரியநாயகி அம்மன்.

News image

சித்திரை பௌா்ணமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் பெரியநாயகி அம்மன்.

Updated On :2 மே 2026, 1:30 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பெளா்ணமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தா்கள் மாட வீதியை வலம் வந்தனா்.

பண்ருட்டி, திருவதிகையில் தேவாரப் பாடல் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளா்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. மாலை 7 மணியளவில் பெரியநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பெளா்ணமி பூஜையையொட்டி மாலை 6 மணி முதல் நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாட வீதியை (16 முறை) வலம் வந்தனா்.

கலாசார நிகழ்ச்சி...

அப்பா்இல்ல அறக்கட்டளை சாா்பில் சித்திரை பௌா்ணமி கலை,கலாசார விழாநடைபெற்றது. இதில்,ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் நடத்தப்பட்டன. சித்திரை மாத பௌா்ணமி சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா். பௌா்ணமியையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.