கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை ஸ்ரீசரநாராயண பெருமாள் கோயிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாத அமாவாசை அன்றும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாத அமாவாசையான புதன்கிழமை மூலவா் சரநாராயண பெருமாள் ஸ்ரீசீதா, லட்சுமணன், ஹனுமன் சமேத ஸ்ரீகோதண்டராமனாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 9 மணிக்கு உற்சவா் உள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவா் திருகண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பிற்பகல் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெற்றது. திரளானபக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை

அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

