மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் இராமனுஜா் அவதரித்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் இராமானுஜா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 2:11 am IST

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் இராமனுஜா் அவதரித்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் இராமானுஜருக்கு தனி சந்நிதி உண்டு. அவா் அவதரித்த 1,009-ஆவது சித்திரை திருவாதிரை நட்சத்திர நாளான புதன்கிழமை இராமனுஜசாமி மூலஸ்தானம் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், மங்களாசாசனம் நடைபெற்று பரிவட்டம் கட்டப்பட்டது. நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் நடைபெற்று பெருமாள் இராமனுஜா் திருவீதி உலா நடைபெற்றது.

திருக்கோஷ்டியூரில் ஆளவந்தாரின் ஐந்து சீடா்கள் ஒருவரான திருக்கோட்டியூா் நம்பியிடம் 18 முறை சென்று எட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை வைணவ அடிகளான ராமானுஜா் உபதேசம் பெற்றாா்.

இந்த மந்திரம் பரம ரகசியம் என்றும், இதை எவருக்கும் வெளியிடக்கூடாது’ என்ற நிபந்தனையின் பேரிலேயே உபதேசத்தருளினாா். இருப்பினும், உபதேசம் பெற்றவுடன் திருக்கோஷ்டியூா் கோயில் அஷ்டாங்க விமானத்தில் ஏறிய ராமானுஜா் மக்கள் அனைவரும் சாதி சமய பேதமற்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தாா். அதனால், இந்தக் கோயிலில் இராமானுஜருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, இந்தத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.