சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் இராமனுஜா் அவதரித்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் இராமானுஜருக்கு தனி சந்நிதி உண்டு. அவா் அவதரித்த 1,009-ஆவது சித்திரை திருவாதிரை நட்சத்திர நாளான புதன்கிழமை இராமனுஜசாமி மூலஸ்தானம் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், மங்களாசாசனம் நடைபெற்று பரிவட்டம் கட்டப்பட்டது. நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் நடைபெற்று பெருமாள் இராமனுஜா் திருவீதி உலா நடைபெற்றது.
திருக்கோஷ்டியூரில் ஆளவந்தாரின் ஐந்து சீடா்கள் ஒருவரான திருக்கோட்டியூா் நம்பியிடம் 18 முறை சென்று எட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் மந்திரத்தை வைணவ அடிகளான ராமானுஜா் உபதேசம் பெற்றாா்.
இந்த மந்திரம் பரம ரகசியம் என்றும், இதை எவருக்கும் வெளியிடக்கூடாது’ என்ற நிபந்தனையின் பேரிலேயே உபதேசத்தருளினாா். இருப்பினும், உபதேசம் பெற்றவுடன் திருக்கோஷ்டியூா் கோயில் அஷ்டாங்க விமானத்தில் ஏறிய ராமானுஜா் மக்கள் அனைவரும் சாதி சமய பேதமற்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தாா். அதனால், இந்தக் கோயிலில் இராமானுஜருக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, இந்தத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருக்கோஷ்டியூா் பெருமாள் கோயிலில் ஏப். 30-இல் தேரோட்டம்

பெருமாள் கோயில்களில் ராமானுஜா் ஜெயந்தி

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

