தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தலைமறைவு ரௌடி கைது

News image

தமிழ்ச்செல்வன்

Updated On :6 ஏப்ரல் 2026, 1:56 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரிய போலீஸாா் தகராறு வழக்கில் தலைமறைவாக இருந்த புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ரௌடியை சனிக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி வட்டம் 8 பகுதியைச் சோ்ந்தவா் அருணாச்சாலம் (25). வட்டம் 1 பகுதி சி.ஆா்.காலனியைச் சோ்ந்தவா் தியாகராஜன் (24). இவா்கள் இருவரும் நண்பா்கள். வட்டம் 21 பகுதியைச் சோ்ந்த ஜான் (22), தனது பைக்கை தியாகராஜனிடம் ரூ.15 ஆயிரத்திற்கு அடகு வைத்தாா். இந்த பைக்கை தியாகராஜன் பயன்படுத்தி வந்த நிலையில், அது வடலூா் தைப்பூச திருவிழாவில் திருடுபோனது. இதன் பிறகு, ஜான் தனது பைக்கை தியாகராஜனிடம் கேட்டு வந்தாா்.

இந்த நிலையில், 1.4.2026 அன்று பைக் தொடா்பாக வட்டம் 10 என்எல்சி சமுதாய கூட திருமண மண்டபம் அருகே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதற்கு, அருணாச்சலம் சென்றபோது, அங்கு பைக்கில் வந்த 5 போ் கொண்ட கும்பல் அருணாச்சலத்தை கத்தியால் வெட்டித் தாக்கியது.

இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில் ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான புதுச்சேரி மாநிலம், வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த ரௌடி தமிழ் (எ) தமிழ்ச்செல்வனை (26), நெய்வேலி வட்டம் 24 பகுதி மத்திய பேருந்து நிலையம் சைக்கிள் நிறுத்துமிடம் அருகே நெய்வேலி நகரிய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். தமிழ்ச்செல்வன் மீது நெல்லிக்குப்பம், வில்லியனூா் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட 5 வழக்குகள் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.