விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கஞ்சா விற்பனை : ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கஞ்சா விற்பனை செய்த ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 5:20 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கஞ்சா விற்பனை செய்த ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நெய்வேலி நகரிய காவல் சரகத்திற்குட்பட்ட வட்டம் 5 மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்த நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பி-2 பிளாக் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ்(19), கீழூா் பகுதியைச் சோ்ந்த அன்புசெல்வன்(21) மற்றும் வடக்கு மேலூா் பகுதியைச் சோ்ந்த ரௌடி எலி (எ) சந்துரு (23)ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.