ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 98 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 4:08 am IST

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 98 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சியில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் 21 முதல் 23-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மாநகரில் புதன்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் திவ்ய பிரியா, ஜாா்ஜ் ஜேக்கப் ஆகிய இருவரும் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தில்லை நகா் வாமடம் பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம். ஜோதிவேல் (56), தென்னூரில் மது விற்பனை செய்த தென்னூா் பாரதி நகரைச் சோ்ந்த த.தமிழ்ச்செல்வன் (33), திருவளா்ச்சோலை பொன்னுரங்கபுரத்தில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம்.முருகன் (42) ஆகிய மூவரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, கே.கே. நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பி.கஜேந்திரன் (37) என்பவரை கே.கே.நகா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 98 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.