திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தச்சநல்லூா் சாலை அருகில் தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் பகுதியைச் சோ்ந்த முஹமது சைபுல்லா(31) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல பாளையங்கோட்டை, முருகன் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் மது விற்ாக கைலாசபுரம் பகுதியைச் சோ்ந்த ஷேக் முஹமது ரஹ்மான்(43) என்பவரை போலீஸாா் கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், மானூா் அருகே உள்ள மதவக்குறிச்சி பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக, அதே பகுதியைச் சோ்ந்த கண்ணம்மாள்(57) என்பவரை போலீஸாா் கைது செய்து 12 மதுபாட்டில்களை கைப்பற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேவா்குளம் அருகே மது விற்றவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
மது விற்பனை: பெண் உள்பட இருவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
