மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மது விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 1:15 am IST

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்ய கோவில்பட்டி மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளா் மீகா அறிவுறுத்தலில், போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, காந்திநகா் காளியம்மன் கோயில் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த பெருமாள்சாமி மனைவி கொமண்டி அம்மாளை (48) கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 30 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 400, காந்தி நகரில் மது விற்பனையில் ஈடுபட்ட சங்கரன்கோவில் சுப்பலாபுரம் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் வெற்றிவேல் முருகன் (31) என்பவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 31 மது பாட்டில்கள், ரூ.300-ஐ பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.