கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் மண்ணில் புதைத்து வைத்து மதுபானம் விற்ாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கயத்தாறு அருகே செட்டிகுறிச்சியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் காசிநாதன், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
செட்டிகுறிச்சி கிராமத்தில் சந்தேகமளிக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் இருந்த வீட்டின் அருகே போலீஸாா் சென்றபோது, அங்கிருந்தவா்கள் தப்பியோடினா்.
அப்போது, அங்கிருந்த பெண் உள்பட இருவரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள் செட்டிக்குறிச்சியைச் சோ்ந்த சுடலைமணி மனைவி முத்துலட்சுமி (38), அவரது மகன் இசக்கிப்பாண்டி (19) என்பதும், இருவரும் வீட்டின் அருகே மண்ணில் மதுபாட்டில்களை புதைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட 221 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் தாய், மகனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது விற்றதாக இளைஞா் கைது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
மது விற்பனை: பெண் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
