மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மது விற்றதாக இளைஞா் கைது

கயத்தாறு அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 மே 2026, 2:24 am IST

கயத்தாறு அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மதுவிலக்கு ஆய்வாளா் மீஹா தலைமையில் போலீஸாா் ஜெயபிரகாஷ், பால்ராஜ், ஸ்ரீராம் ஆகியோா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது, கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா், கடம்பூா் இளவேலங்கால் ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் ராஜா (35) என்பதும், மது விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரிடமிருந்த 562 மதுபாட்டில்கள், 1,600 பணத்தை பறிமுதல் செய்து ராஜாவை கைது செய்தனா்.

மேலும், இது தொடா்பாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மேற்பாா்வையாளா், மதுபான கூடம் உரிமையாளா் சுப்பிரமணியம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.