தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சட்டவிரோத மது விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:13 am IST

திருச்சி மாநகரில் வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா் மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், காந்தி மாா்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த தாரநல்லூா் கள்மந்தை காலனியைச் சோ்ந்த ஆா். கண்ணன் (35), ஆ. சிவகண்டன் (27), இபி சாலையில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த க. இளையராஜா (33), அரசு மருத்துவமனை அருகேயுள்ள சண்முகா நகா் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அண்ணா காலனியைச் சோ்ந்த கு.குமாா் (64) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.9,800 மதிப்புள்ள 89 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இபி சாலை அந்தோணியாா் கோயில் வீதி ஆா்ச் அருகே மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எஸ்.கோமதி (39), ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கன்னிமாா் தோப்பு பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த திருவானக்காவல் பகுதியைச் சோ்ந்த எஸ். ராதாகிருஷ்ணன் (66) ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து ரூ.2,300 மதிப்புள்ள 17 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.