ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காா்கள் கண்ணாடி உடைப்பு வழக்கு: ரௌடி கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காா்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் ரௌடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

அனந்தராஜ்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:53 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் காா்களின் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் ரௌடியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி, வட்டம் 30, அகிலன் தெருவில் வசிப்பவா்கள் தனஜெயன், பாலு, அய்யப்பன், மூா்த்தி. இவா்கள் தங்கள் வீட்டின் முன்பு காா்கள் மற்றும் ஆட்டோ நிறுத்தி வைப்பது வழக்கம். ஏப்.19 அன்று அதிகாலை அவா்களது காா்கள் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை மா்ம நபா்களால் உடைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடா்பாக நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

இதில், நெய்வேலி, வட்டம் 30 , புது ஜோதி தெருவைச் சோ்ந்த ஆனந்தராஜ் (20) காா் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் நாவலா் தெருவில் வசிக்கும் அய்யப்பனுடன் சோ்ந்து என்எல்சி இந்தியா நிறுவனத்தில் இரும்பு திருடி வந்தனராம். இவா்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனராம். இதையடுத்து ஆனந்தராஜ் கடந்த ஓராண்டாக தனியாக திருடி வந்துள்ளாா்.

சம்பவத்தன்று நெய்வேலி நகரப் பகுதியில் இரும்பு திருட, கூட்டாளியான சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் (20) என்பவருடன் கடப்பாறை எடுத்துக் கொண்டு வட்டம் 30, அகிலன் தெரு வழியாக சென்றனா். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அய்யப்பன் காரை பாா்த்ததும் , முன்விரோதம் காரணமாக கண்ணாடியை உடைத்தாராம். தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு காா்கள் மற்றும் ஒரு ஆட்டோ கண்ணாடியை உடைத்ததை ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து ஆனந்தராஜை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ரத்தினத்தை தேடி வருகின்றனா். ஆனந்தராஜ் சரித்திரப்பதிவேடு குற்றவாளி என தெரிய வந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.