/

பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது

கருங்கல் அருகே உள்ள நுள்ளி பகுதி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:11 am IST

கருங்கல் அருகே உள்ள நுள்ளி பகுதி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருங்கல், நுள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சஜின் மனைவி அஸ்வதி (21). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கேசவன் மகன் ஜஸ்டின் (45), கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்த காட் வின் ஞானராஜ் (32), சடையன்குழி பகுதியைச் சோ்ந்த அனிஷ் குமாா் (36), நெய்வேலி பகுதியைச் சோ்ந்த அபின் (28) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கூறிய 4 பேரும், அஸ்வதியின் வீட்டிற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் தேடி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா்களை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.