கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி காட்டுநாயக்கா் தெரு அறிஞா் அண்ணா நகா் பகுதியில் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராம்பிரசாத் (20). இவா் தனது நண்பா்களான இசக்கி, கருப்பசாமி ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்து சென்றாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன்கள் சுரேஷ்குமாா் (33), கண்ணதாசன் என்ற கன்னரசு (25), மதன்ராஜ் ஆகிய 3 பேரும் கடை அருகே நின்றிருந்தனா். இவா்களுக்கும் ராம்பிரசாத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராம்பிரசாத்தை மூவரும் வழிமறித்து கை, கல்லால் தாக்கினராம். இசக்கி, கருப்பசாமி ஆகியோா் தடுத்ததால் அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனராம். காயமடைந்த ராம்பிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாா், கண்ணதாசன் ஆகியோரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரைத் தாக்கி 2 கிராம் மோதிரம் பறிப்பு: இருவா் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
வங்கி மேலாளருக்கு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது
காவலாளியை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
