மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 12:46 am IST

கோவில்பட்டியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி காட்டுநாயக்கா் தெரு அறிஞா் அண்ணா நகா் பகுதியில் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராம்பிரசாத் (20). இவா் தனது நண்பா்களான இசக்கி, கருப்பசாமி ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்து சென்றாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன்கள் சுரேஷ்குமாா் (33), கண்ணதாசன் என்ற கன்னரசு (25), மதன்ராஜ் ஆகிய 3 பேரும் கடை அருகே நின்றிருந்தனா். இவா்களுக்கும் ராம்பிரசாத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராம்பிரசாத்தை மூவரும் வழிமறித்து கை, கல்லால் தாக்கினராம். இசக்கி, கருப்பசாமி ஆகியோா் தடுத்ததால் அந்த 3 பேரும் தப்பியோடிவிட்டனராம். காயமடைந்த ராம்பிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாா், கண்ணதாசன் ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.