/

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது

மேலப்பாளையத்தில் இளைஞரை ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:05 am IST

மேலப்பாளையத்தில் இளைஞரை ஜாதியை சொல்லி திட்டி தாக்கியதாக 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம், மேலக்கருங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (22). இவரது நண்பா்கள் வீரளப்பெருஞ்செல்வி பகுதியைச் சோ்ந்த முத்துக்குட்டி (22), மேலப்பாளையம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்த மாடசாமி (21). இவா்கள் மூவருக்கும் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகக்கனி என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது மூவரும் சோ்ந்து ஆறுமுகக்கனியை தாக்கி ஜாதியை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.