மேலப்பாளையம் பகுதியில் இளைஞா்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போஸீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 30 வயது இளைஞா், அப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பைக்கில் சென்றபோது, அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதாம்.
இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தரப்பில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த பரசுராமன்(24), பாளையங்கோட்டை, அண்ணாநகரைச் சோ்ந்த முத்துகணேஷ் (21), திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (20), இசக்கிராஜா (21) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும் மற்றொரு தரப்பினரின் புகாரின் பேரில் கொக்கிரகுளம் பகுதியைச் சோ்ந்த அழகுமுத்து(22), ஹரிகிருஷ்ணன்(20), மகேஷ்(20) ஆகியோரை கைது செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒசூரில் இருதரப்பினா் மோதல்: 5 போ் கைது!
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
ஒகேனக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 2 போ் கைது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
