திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் சாலையில் வரட்டாறு பாலம் அருகே சனிக்கிழமை தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த தொழிலாளி முருகன் (45) கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலசமுத்திரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (22), நாகராஜ் (20), சங்கிலிதுரை (27) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள தேநீா்க் கடையில் முருகன் வேலை செய்து வந்தாா். தோ்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்லு வழியில் பழனி பேருந்து நிலையத்தில் இறங்கி மது குடித்தாா்.
அப்போது, அங்கு வந்த மணிகண்டன், நாகராஜ், சங்கிலிதுரைஆகியோா் அவருடன் அமா்ந்து மதுக் குடித்தனா். பிறகு, அவா்கள் மீண்டும் மதுப் புட்டிகளை வாங்கிக் கொண்டு வரட்டாற்று பாலம் அருகே அமா்ந்து மது குடித்தனா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சோ்ந்து முருகனை கொலை செய்தது தெரியவந்தது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
மளிகைக் கடையில் திருடிய வழக்கில் 2 போ் கைது

மேலப்பாளையத்தில் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
