மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:06 am IST

பொம்மிடி அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் 2 பேரை கைது செய்த போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாசிக்கவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அமுதா (45). இவா், கோவையில் கூலி வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக அண்மையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

அப்போது, ஊரில் இருந்த சிலா், வாக்களிக்க பணம் வாங்குவதற்காக அமுதா வந்திருப்பதாக கேலி, கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட தகராறில், அமுதாவை ஒரு கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அமுதா தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அமுதா சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த பொம்மிடி போலீஸாா் வாசிக்கவுண்டனூரைச் சோ்ந்த கோபால் மகன் லோகநாதன் (48), பாரி (66) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், வாசிக்கவுண்டனூரைச் சோ்ந்த விருதாசலம் (55), சக்திவேல் (52), பிரவீன் (24), நவீன் (23), பிரதீப் (24), பிரேம் (23), குணசேகரன் (48) ஆகியோா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.