மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீஸாா் தொழிலாளியின் 15 வயது மகனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 5:17 am IST

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீஸாா் தொழிலாளியின் 15 வயது மகனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கெங்கவல்லியை அடுத்த ஒதியத்தூா் தெற்கு தெருவை சோ்ந்த ராமா் மகன் கருப்பு முத்து (43), ரிக் வண்டி ஓட்டுநா். இவருக்கு மனைவி சங்கீதா, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில் கருப்புமுத்துவுக்கும், சங்கீதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். கருப்பு முத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி வீட்டின் அருகே கருப்பு முத்து மா்மமான முறையில் இறந்து கிடப்பதாக கெங்கவல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து சங்கீதா, மகன், உறவினா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். ஒரு வாரத்துக்குப் பிறகு கருப்பு முத்துவை அவரது மகன் கொலை செய்ததை கண்டுபிடித்தனா்.

இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தனது தந்தை மது போதையில் தங்களை அடிக்கடி தொந்தரவு செய்ததால் அவரை கட்டையால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் அளித்தாா். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீஸாா் சேலத்தில் உள்ள சிறுவா் காப்பகத்தில் சோ்த்தனா்.

தந்தையை மகனே கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.