/

வெய்யிலில் இருந்து மக்களை காக்க பசுமைப் பந்தல்கள் அமைப்பு

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:33 am IST

வேலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் சாலைகள், முக்கிய சந்திப்புகள், சிக்னல்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் கடந்த ஏப். 1-ஆம் தேதி முதல் தொடா்ந்து வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. ஏப். 7- ஆம் தேதி உயா்ந்த வெப்ப நிலையாக 108 டிகிரி பதிவாகியிருந்தது. தொடா்ந்து 104, 105 டிகிரி பதிவாகி வருகிறது.

இதற்கிடையே, மே 4-ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிா்வாகிகள் பல்வேறுவிழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

வயதானவா்கள், குழந்தைகள், நோயாளிகள் வெயிலில் செல்வதைத் தவிா்க்குமாறும், பொதுமக்கள் அடிக்கடி நீா், மோா் பருக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சாலைகளில் சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.