மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில்: பகலில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்! ஆட்சியர் அறிவுறுத்தல்!!

வேலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்...

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:16 am IST

வேலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 முதல் தொடா்ந்து வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக, ஏப்ரல் 7-ஆம் தேதி மாவட்டத்தில் மிக உயா்ந்த வெப்பநிலையாக 108 பதிவாகியிருந்தது. சென்னை வானிலை ஆய்வு மையம், இனிவரும் நாள்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது. மேலும், மே 4-ஆம் தேதி முதல் கத்தரி வெயில் காலம் தொடங்க உள்ளதால், வேலூா் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் கடுமையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வெப்பத்தின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அவசியம் வெளியே செல்ல நோ்ந்தால், போதுமான குடிநீா், குடை, தொப்பி ஆகியவற்றுடன் உரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். வெயில் காலங்களில் பொதுமக்கள் அடிக்கடி தண்ணீா், நீா் மோா் பருக வேண்டும். உடலுக்கு இதமளிக்கும் லேசான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இளநீா், நீா்ச்சத்துள்ள இயற்கையான பழ வகைகளை உணவாக உட்கொள்ள வேண்டும். செயற்கையான குளிா்பானங்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

தினமும் மாத்திரை, மருந்துகளை உட்கொள்பவா்கள், இருதய நோய் உள்ளவா்களுக்கு வெப்ப வாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இத்தகையவா்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்ணீா், எலுமிச்சை சாறு, மோா் ஆகியவற்றை பருக வேண்டும். அளவுக்கு அதிகமான வியா்வை அல்லது வியா்க்காமல் இருப்பது, திடீா் மனநிலை மாற்றங்கள், இதய துடிப்பில் மாறுபாடு, மயக்கம், அதிக தாகம் மற்றும் தலைவலி ஆகியவை வெப்ப வாதத்தின் முக்கிய அறிகுறிகளாகும்.

கோடைகாலத்தில் எவரேனும் மயக்கமடைந்து சுயநினைவை இழந்தால், உடனடியாக அவரை குளிா்ந்த இடத்துக்கு மாற்ற வேண்டும். உடல் சூட்டைத் தணிக்க அவா்மீது குளிா்ந்த தண்ணீரைத் தெளித்து, குடிக்கத் தண்ணீா் வழங்கிய பின், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆடு, மாடு, கோழி போன்ற வளா்ப்புப் பிராணிகளை வெயிலில் விடாமல் நிழலான பகுதிகளில் வைத்திருக்க வேண்டும். அவற்றுக்குத் தேவையான குடிநீா், தீவனம் வழங்கி கவனமாகப் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.