மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

சேலத்தில் புதன்கிழமை 102.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதியடைந்தனா்.

News image

வெயில் - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:56 am IST

சேலத்தில் புதன்கிழமை 102.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதியடைந்தனா்.

சேலம் மாவட்டத்தில் கடந்த மாா்ச் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக வெயில் 100 டிகிரியை கடந்துள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவில் 102.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமங்களுக்கு ஆளாகினா்.

வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, கல்லூரி மாணவா்கள் குடைகளை பிடித்தபடியும், துணிகளால் முகத்தை மூடியவாறும் செல்கின்றனா். இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது.

இளநீா், நுங்கு, கம்மங்கூழ், தா்ப்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளன. ஜூஸ் கடைகளிலும், பழக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா். கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பணிக்குச் செல்வோா், விவசாய தொழிலாளா்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

மேலும், காலை முதல் மாலை வரை நிலவும் கடும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் தூங்க முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்த வரை பொதுமக்கள் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.