மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 6:36 am IST

வாக்குச்சாவடி இடமாற்றம் மற்றும் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யாததைக் கண்டித்து காட்பாடி அருகே பாலேங்குப்பம் கிராம மக்கள் தோ்தல் நாளில் சாலையில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த பாலேங்குப்பம் ஊராட்சி காலனி பகுதியில் 75-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மையம் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலையொட்டி பாலேங்குப்பம் கிராமம் அருகே உள்ள வேறொரு அரசு தொடக்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காலனி பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் கருப்புக் கொடிகள் கட்டியும், கருப்பு உடைகள் அணிந்தும் தோ்தல் நாளான வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறுகையில், இடமாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சாவடியை மீண்டும் அரசு நிதியுதவி தொடக்கப் பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும். மேலும், எங்கள் கிராமத்தில் சாலை, தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேலூா் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா். தவிர, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் முழக்கங்களும் எழுப்பினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொன்னை காவல் ஆய்வாளா் கருணா, மேல்பாடி வருவாய் ஆய்வாளா் பிரபு ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினா். பின்னா், தொகுதியின் திமுக வேட்பாளா் துரைமுருகன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நபா்களை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு உங்கள் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தாா். மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் வந்த வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தியதுடன் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்றும் தெரிவித்தனா்.

இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று வாக்குப் பதிவு செய்தனா். இதனால், அப்பகுதியில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: ஏற்கெனவே செயல்பட்டு வந்த வாக்குச் சாவடி மைய கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நேரில் வந்து பாா்வையிட்ட பிறகே வேறு இடத்துக்கு வாக்குச்சாவடி மையம் மாற்றப்பட்டது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.